google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சூரசம்ஹாரம்

Saturday, November 9, 2013

சூரசம்ஹாரம்


(இங்கே இன்னும் என் நெஞ்சை விட்டு அழியாத என் கடந்த கால நினைவு...என்றும் பசுமையான பக்திப் பரவசம்  மிக்க ஒரு நிகழ்வு... )






அப்போது (1976)  நான் திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கலைக்கல்லூரியில் PUC படித்துக்கொண்டிருந்தேன் பெரியகுளம் அருகில் உள்ள வடுகப்பட்டியில் பள்ளிப்படிப்பை முடித்ததும் என் பூர்விக ஊர் திருச்செந்தூர் அருகில் இருந்ததாலும் என் உறவினர் கனகசபாபதி அவர்கள் முதல்வராக அந்தக் கல்லூரியில் இருந்ததாலும்  என் தந்தை என்னை அந்தக் கல்லூரியில் படிக்க வைத்தார் 

நான் பக்திப் பரம்பரையில் வந்தவன் என்பதால்  என் நெற்றி எப்போதும் திருநீறு விபூதி பூசியிருக்கும் நான் அந்த வயதில் அதீத கடவுள் பக்தி உள்ளவன் கல்லூரி விடுதியில் தங்கி படித்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அப்பனே முருகா...முருகா...என்று கோயில் செல்வது வழக்கம்

கோயில் அருகில் உள்ள கடலில் குளிப்பதில் ஓர் ஆனந்தம்....கடல் தண்ணீரில் குளித்தப்பிறகு அங்கிருந்து சிறு தொலைவில் இருக்கும் நாழிக்கிணற்றில் நாலு வாளி நல்ல  தண்ணீரை தலையில் மொண்டு ஊற்றி ஈர வேஷ்டியுடன் அரைபக்கிரியாகக் கோயில் உள்ளே சென்று அப்பன் முருகனை தரிசிப்பதில்தான் எத்தனை ஆனந்தம் அப்போது வாய் முனுமுனுப்பது..........
" மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்".... என்ற பக்திப் பாடல்தான்

(இப்படிக் கடலில் குளிப்பதும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை.ஒரு நாள் குளிக்கும் போது கடல் அலை என்னை இழுத்து ஆழத்தில் போட்டு...ஆ...வென்று உப்புத்தண்ணீரை குடிப்பதை பார்த்து அருகில் குளித்த  யாரோ ஒருவர்  என் தலை முடியைப் பிடித்து இழுத்து காப்பற்றிய நிகழ்ச்சிக்குப் பிறகு....கால்களை மட்டும் கடல் அலைகளில் நனைத்துவிட்டுக் கோயில் செல்வது வழக்கம்) 

இப்படி பக்திமானாக இருந்த நான் அப்போது நடந்த சூரசம்ஹாரத்தைக் காணாமல் இருப்பேனா...?



திருச்செந்தூர் கோயில் வளாகம் சுற்று மண்டபன் மிகுந்த பொருட்செலவில் அப்போதைய முருகன் பக்திமானும்  சினிமா படத்தயாரிப்பாளருமான தேவர் அவர்களால் கட்டப்பட்டது.....அவர் தங்குவதற்குக்  கோயில் வளாகத்திலேயே வள்ளி குகைக்கோயில் செல்லும் வழியில் ஒரு சிறு குடில் உண்டு.
அப்போது இதே போன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது 



சூரசம்ஹாரம் நடைபெறும் சில தினங்களுக்கு முன்பே கோயில் பாட்டுக் கச்சேரியாலும்  பேச்சு மன்றங்களாலும்  களைகட்டிவிடும்
இன்னும் நினைவில் இருக்கின்றது திருமுருக கிருபானந்த வாரியாரின் நகைச்சுவை மிளிரும் பரவசமூட்டும் பக்தி உரையும்..........
இன்னும் காதில் ரீங்காரமிடும் குன்னக்குடி வைத்தியநாதன் தூக்கிப் போட்டு வித்தைக் காட்டி வாசிக்கும் வயலின் இசையும்........
அங்கே முதல் வரிசையில் ஒய்யாரமாக  வீற்றிருப்பார் உடல் முழுக்க சந்தனம் விபுதியுடன்...கொடைவள்ளல் தேவர் பெருமகனார்
 இவர்கள் முருக தேவனை வணங்கும் போது அப்படியே அவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் தேவரையும் வாழ்த்த மறப்பதில்லை   

Made with .freeonlinephotoeditor.com
 
அடடா...அந்த மண்டபத்தில் நடக்கும் அந்தப் பரவசக்காட்சிகளைக் கண்டு அசைந்தாடுவது போல் இருக்கும் அருகில் உள்ள சுற்று மண்டபத்தின் தூணில் கட்டப்பட்டுள்ள கோயில் யானையின் தலையாட்டம்

சூரசம்ஹாரம் நடப்பதோ கோயில் முன்புறம் உள்ள கடல் மணலில்...ஒரு பக்கம் கடல் அலைகள் துதிபாடும் இன்னொரு பக்கம் பக்தர்களின் முருகா...முருகா...பரவச ஒலிகேட்கும் கூட்டமோ கூட்டம் நானும் அப்போது அந்தக் கூட்டத்தில்..........

சிலர் தூரத்தில் ஒரு மேடையிலிருந்து சூரனின் சப்பரத்தை தூக்கி வருவார்கள்அவர்கள் எல்லாம் அசுரர் சாதியினரா...? அன்று எதுவும்  எனக்குத் தெரியாது

சிலர் கோயிலில்ருந்து   முருகன் சப்பரத்தையும் பூஜை செய்த ஒரு பெரிய நீண்ட வேலையும் தூக்கி வருவார்கள் அவர்கள் தேவர் சாதியினரா....? அன்று அதுவும் எனக்குத் தெரியாது

அசுரன் சப்பரமும் முருகன் சப்பரமும் எதிர் எதிரே வந்து நிற்கும் முருகா...முருகா...என்று கூச்சல் கேட்கும் வெற்றி வேல் ...வீர வேல் என்று கோசம் எழும் ..அப்பாடா....அந்த நீண்ட வேலை வைத்திருக்கும்  சாமி சூரனின் கழுத்தில் வைப்பார் அவ்வளவுதான் சூரனின் சப்பரத்தில் பின்னாடி ஒளிந்திருக்கும் ஒர்  ஆசாமி  சூரனின் தலையை எடுத்துவிட்டு ஒரு சேவலை தலை இருந்த இடத்தில் வைத்துப் பிடித்துக்கொள்வார்
சூரன் முருகனின் சேவகனாகச் சேவலாக மாறிவிட்டானோ...? அத்துடன் முடிந்தது சூரசம்ஹாரம்

https://sphotos-a-ord.xx.fbcdn.net/hphotos-frc3/p480x480/972052_558913577498785_40903813_n.jpg



இன்று நான் எந்தக் கடவுள்களையும் கும்பிடுவதில்லை 
எந்தக் கடவுள் இல்லை என்பாரையும் கும்பிடுவதில்லை 
கடவுள் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும் 
இல்லை என்றால் இல்லாமல் போகட்டும்

ஆனால் ஒன்றுமட்டும் புரிவதில்லை....
வருடம் தோறும் சூரசம்ஹாரம் வருகின்றது
 எந்த  சூரர்களும் சாவதில்லையோ...?


                                       thanks-youtube-by hamizhpaadal

பகுத்தறிவோ.....? பகுக்காத அறிவோ...? என் தேடல் தொடர்கின்றது 
பிறந்ததிலிருந்து நான் யாருக்கோ அடிமையாக இருந்துள்ளேன் 
அடிமையாக வளர்க்கப்பட்டுள்ளேன்......என்னை அடிமைப்படுத்தியது கடவுள்களா...? அல்லது அசுரர்களா....? எதுவும் தெரியவில்லை 

ஆனால் இன்று நான் நானாக இருக்கின்றேன் 
என்னையே நம்பி வாழ்கின்றேன்.........
கடவுள்கள் கூட்டமும் அசுரர்கள் கூட்டமும் 
என்னை எதுவும் செய்யமுடியாது 
என்றும் எனக்குள் உண்மை உறங்காமல் விழித்திருக்கும் வரை.....


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1