google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சிட்டுக்குருவி-ஓர் இன அழிவின் குறீயீடு

Tuesday, November 26, 2013

சிட்டுக்குருவி-ஓர் இன அழிவின் குறீயீடு


என் சின்னஞ்சிறு வயதில்
உன் சின்னஞ்சிறு உருவம்
என்னைச் சிரிக்க வைத்தது
இன்றோ என்னை
சிந்திக்க வைத்ததே! 

முற்றத்து வாசலில் 
சிதறிக் கிடக்கும்..
சோற்றுப் பருக்கைகளை
தத்தி தத்தி நீயும்

அழகாய் உன் அலகால்
கொத்திக் கொத்தி தின்னும்...
அடடா...அழகே ..அழகு!



வசந்த காலம் வந்துவிட்டால் 
வைக்கோல்,காகிதம்,புற்களில்..
கூரை மோட்டில்
மாட்டுக் கொட்டகைகளில்
அடை மழைக்கும் ஒழுகாத
அழகான வீடு கட்டும்
இயற்கையின் படைப்பில்
பொறியியல் விஞ்ஞானி  நீ!



அழகாய் வீடு கட்டி 
அதிலே முட்டைகளிட்டு 
குஞ்சுகளோடு குலாவி......... 
இல்லறமே நல்லறம் என்று
இயம்பிய   மெஞ்ஞானி நீ!


























ஒ..குருவி! சிட்டுக்குருவி!

கடைசியாக  உன்னைப் பார்த்தது
எப்போது என்று நினைவில்லை..
எங்கேதான் நீ போனாயோ
எதுவும் தெரியவில்லை...?



அமைதி விரும்பி நீ 
அதனால்தான்
இந்த ஆர்ப்பாட்ட உலகில்
தப்பாட்டம் வேண்டாமென்று.....
 தப்பித்தான் போனாயோ...?
வழி தவறித்தான் போனாயோ....?



இல்லையேல்...
இங்கே இருக்கும்
அறிவில்லா எத்தர்கள்
ஆயுர்வேத சித்தர்கள் 
ஆண்மை பெருக....



ஆ..வென்று விழுங்கு
சிட்டுக்குருவி லேகியம்
என்றுதான் சொல்லி...
உம்மைத்தான் அழித்தாரோ.... ?     



அய்யகோ...
இன்னிசை பாடும்
உன் குரலிசை இல்லையே...?
இதுவரை அப்படியொரு
மெல்லிசை கேட்டதில்லையே..?  


 

அழிந்து கொண்டிருக்கும் 
என் தமிழ் இனத்தின்  
அழிவின் வலியை
அறிந்தவன் நான்...

அழிந்து போன..........
உன் இனத்தின் அவலம் 
இதயத்தில் விதைத்தது 
வேதனை வித்துக்களை.....

இது ஒரு மீள்பதிவு .............................பரிதி.முத்துராசன் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1