google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நான் ஜெயமோகன்அல்ல

Monday, November 4, 2013

நான் ஜெயமோகன்அல்ல

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்று ஆரம்பிக்கும் அதிமேதாவி ஜெயமோகன் என்ற எழுத்தாளருடன் விவாதம் செய்யும் அளவுக்கு நான் அப்படியொன்றும்  அப்பாடக்கர் முத்தமிழறிஞர் அல்ல.....  அதனால்தான் இந்தப்பதிவுக்குத் தலைப்பு... 
நான் ஜெயமோகன்அல்ல

AGARA MUTHALA ELUTHTHELLAAM AATHI  
PAGAVAN MUTHATRE ULAGU  

இதைப் படித்ததும் என்னடா இவன்? 
முட்டாள்... என்ன எழுதியிருக்கின்றான்? என்று 
என்னை நீங்கள் திட்டினால் 
நீங்கள் ஆங்கிலம் எழுத்துக்களை அறியாத 
உலக ஞானம் இல்லாத அறிவுஜீவி என்று அர்த்தம் 

அப்படியும் நீங்கள் அதைப் படித்துவிட்டாலும்...
அதன் அர்த்தம் தெரியாமல் விழித்தால்....
அடடா.....ஆங்கில  எழுத்துக்கள் மட்டுமே படிக்கத் தெரிந்தவர் 
மற்றபடி ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதவர் என்று அர்த்தம் ஏனென்றால் அங்கே எழுதப்பட்ட வார்த்தைகள் 
இவைதான்.....

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


தமிழில் எழுதப்பட்ட திருக்குறளை அப்படி அண்ணன் ஜெயமோகன் சொன்னதுபோல்ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதி.....
இப்படி ஆங்கில எழுத்துருவில் ஒரு திருக்குறள் புத்தகம் போட்டால் உலகிலேயே அதிகம் விற்கக்கூடிய ஆங்கிலப் புத்தகம்...ச்சே...தமிழ் புத்தகம்... அட...ச்சே..  அதுவுமில்லையா...? ஆங்கில எழுத்துரு தமிழ் புத்தகம் (ஆங்கிலிஷ் தமிழ்  புத்தகம் ) திருக்குறளாக (THIRUKKURAL) இருக்கும் 

A, as its first of letters, every speech maintains; 
The "Primal Deity" is first through all the world's domains. 

என்று ஆங்கிலத்தில் எழுதினால்...
தமிழ்  தெரியாத ஆங்கிலம் அறிந்த அனைவரும் அர்த்தம் அறிவர் 
அப்படி இல்லாமல்....... இப்படி எழுதினால் 

AGARA MUTHALA ELUTHTHELLAAM AATHI  
PAGAVAN MUTHATRE ULAGU  

தமிழனுக்கும் திருக்குறள் தரிகிடத்தோம் 
தமிழனுக்கும் தமிழும் தரிகிடத்தோம் 

எங்க தாத்தா என்றோ சொன்ன கதை......

ஒரு படித்த அறிஞனும் ஒரு படிக்காத முட்டாளும் 
இரண்டுபேரும் ஒன்றாகப்  பாதையில் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது....இருவரும் பாதையில் கிடந்த  சாணியை மிதித்து விட்டார்கள்  
படிக்காத முட்டாளோ அடச்சீ...பாதையில் மாடு சாணம் போட்டு இருக்கு என்று காலில் ஒட்டிய சாணியைக் கல்லில் தேய்த்து துடைத்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தானாம் 

ஆனால்....

படித்த அறிவாளியோ அந்தச் சாணியைக் கை விரலில் எடுத்து 
இஃது என்ன சாணி...? என்று ஆரய்ச்சி செய்ய மூக்கு அருகில் கொண்டு சென்று முகர்ந்துப் பார்த்தானாம் அப்போது சாணி மூக்கில் ஒட்டிக்கொண்டது அடடா...அந்த அறிவாளியும் அந்தச் சாணி 
மாட்டுச் சாணி அல்ல மனித சாணி என்று 
அதன் நாற்றத்தை வைத்து அறிந்து கொண்டானாம்...
இஃது எப்படியோ...? அப்படித்தான் 
நம்ம ஜெ.மோ சொல்லும் கதையும் இருக்கு  

அய்யன்திருவள்ளுவரே!
என்னை நீரும்  மன்னிப்பீராக 
உமது குறளை இப்படி நானும் கடித்து குதரியதர்க்காக........... 

thamilthai


அய்யோ...தமிழ்த்தாயே!
இந்தப் பாவி (ஜெ.மோ) வை  நீயும் மன்னிப்பாயாக
உனது அழகான  உருவத்தை  அரூபமாக மாற்ற நினைத்ததற்காக...

                                     thanks-YouTube-p.s.p. Nagai


*************************************************************************

பெரியாரை வம்புக்கு இழுக்கும் ஜெயமோகன் 



http://kavithaivaanam.blogspot.in/2013/11/jayamohan-periyar.html
 
எது எப்படியோ தந்தை பெரியாரையும் வம்புக்கு இழுத்து தன்னை பெரியார் அளவுக்கு உயர்ந்தவராக காட்டிக்கொள்ளும் ஜெ.மோ...எத்தனை முறை ஊளையிட்டாலும் நரி சிங்கம்போல் கர்ஜனை செய்ய முடியாது.
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1