google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஆதலால்.....வரட்டும் சுனாமி!

Wednesday, October 16, 2013

ஆதலால்.....வரட்டும் சுனாமி!


வரட்டும் சுனாமி 
வந்து என்னை 
என்ன செய்துவிடும்...?


எந்தப் பேரலையையும் 
எதிர்த்து நிற்கும் திராணி
என்னுள் நிறைந்திருக்கு........
அது 
குறையும் போது 
ஆறுதல் தர 
அரசு இருக்கு.....
அரசு டாஸ்மாக் 
கடைகள் இருக்கு...

அங்கே 
கவலைகள் மறக்க 
உள் நாடு வெளி நாடு 
கசாயம் மருந்து இருக்கு  

கட்டிங்கோ....?
குவார்டரோ.....?  
அம்மா தண்ணீர் 
கலந்து அடித்தால் 
ஆறிப் போகும் ரணங்கள் 

ஆதலால்...........
வரட்டும் சுனாமி 
வந்து என்னை 
என்ன செய்து விடும்?

..........................பரிதி.முத்துராசன் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1