ஆதலால் காதல் செய்வீர்-
வெள்ளித்திரையில்
வாலிபக் காதலை
கிள்ளிப் பார்த்த சினிமா
போதையூட்டும்
போலிக்காதலை
தோலுரித்த சினிமா...
சொல்வது தெரியுமா?
நண்பர்கள் கூட்டத்தில்
நண்பி ஒருத்தியை
காதல் வலை
வீசினான் அவன்
அவளும் அகப்பட்டாள்
அவனும் அவளும்
பருவ வயது......
உல்லாசயிசத்தை
மாமல்லபுரத்தில்
மல்லாக்க கொண்டாடி...
அவள் வயிற்றில்
அவன் கருவை சுமந்தாள்
அழிக்க நினைத்வர்கள்
அல்லாடிப் போனார்கள்
ஏங்கிய வயது
வீங்கிய வயிறு
காட்டிக் கொடுத்தது
அவளைப் பெற்றோர்
அனலில் புழுவாய்
அல்லல் பட்டார்
அவனைப் பெற்றோர்
அந்தஸ்து பார்த்து
அகமொன்று
புறமொன்று பேசியே..
சாதியும் அரசியலும்
சமரசம் செய்வதாய்
சங்கடம் செய்திட...
ஏளனமாய்க் கேட்டார்
மகனை பெற்றோர்....
"என்ன விலை வேண்டும்
உன் மகள் கற்புக்கு...?"
ஆத்திரத்தில் அவளும்
அவனைப் பிரிந்தாள்...
அவளும் பெற்ற
அழகான ஆண்குழந்தை
அதுவும் எங்கே
அவள் காதலன் போல்
அழுக்காய் இருக்குமோ..?
என்று எண்ணியே....
அனாதை இல்லத்தில்
அள்ளிப் போட்டாள்
எல்லோருக்கும்
எல்லாக் காயங்களும்
ஆறிப்போனது...
அடுத்த வாழ்க்கைக்கு
காலம் அவர்களை
அழைத்துப் போனது
எல்லோருக்கும்
எந்த வலியும் இல்லை
எல்லா வலியும்
புதிதாய் பிறந்தவனுக்கே
எந்த வழியில் போவது...?
எதுவும் தெரியாமல்
விழியில் வலியோடு
அழுது கொண்டு நிற்க...
ஆதலால் காதல் செய்வீர்
அங்கதத்தில்
ஆதங்கத்தில்
ஆழமாய்ச் சொல்லுகிறது
'சமுதாயக் கோளாறை
சரிசெய்து கொள்வீர்' என்று
.....................பரிதி.முத்துராசன்
வெள்ளித்திரையில்
வாலிபக் காதலை
கிள்ளிப் பார்த்த சினிமா
போதையூட்டும்
போலிக்காதலை
தோலுரித்த சினிமா...
சொல்வது தெரியுமா?
நண்பர்கள் கூட்டத்தில்
நண்பி ஒருத்தியை
காதல் வலை
வீசினான் அவன்
அவளும் அகப்பட்டாள்
அவனும் அவளும்
பருவ வயது......
உல்லாசயிசத்தை
மாமல்லபுரத்தில்
மல்லாக்க கொண்டாடி...
அவள் வயிற்றில்
அவன் கருவை சுமந்தாள்
அழிக்க நினைத்வர்கள்
அல்லாடிப் போனார்கள்
ஏங்கிய வயது
வீங்கிய வயிறு
காட்டிக் கொடுத்தது
அவளைப் பெற்றோர்
அனலில் புழுவாய்
அல்லல் பட்டார்
அவனைப் பெற்றோர்
அந்தஸ்து பார்த்து
அகமொன்று
புறமொன்று பேசியே..
சாதியும் அரசியலும்
சமரசம் செய்வதாய்
சங்கடம் செய்திட...
ஏளனமாய்க் கேட்டார்
மகனை பெற்றோர்....
"என்ன விலை வேண்டும்
உன் மகள் கற்புக்கு...?"
ஆத்திரத்தில் அவளும்
அவனைப் பிரிந்தாள்...
அவளும் பெற்ற
அழகான ஆண்குழந்தை
அதுவும் எங்கே
அவள் காதலன் போல்
அழுக்காய் இருக்குமோ..?
என்று எண்ணியே....
அனாதை இல்லத்தில்
அள்ளிப் போட்டாள்
எல்லோருக்கும்
எல்லாக் காயங்களும்
ஆறிப்போனது...
அடுத்த வாழ்க்கைக்கு
காலம் அவர்களை
அழைத்துப் போனது
எல்லோருக்கும்
எந்த வலியும் இல்லை
எல்லா வலியும்
புதிதாய் பிறந்தவனுக்கே
எந்த வழியில் போவது...?
எதுவும் தெரியாமல்
விழியில் வலியோடு
அழுது கொண்டு நிற்க...
ஆதலால் காதல் செய்வீர்
அங்கதத்தில்
ஆதங்கத்தில்
ஆழமாய்ச் சொல்லுகிறது
'சமுதாயக் கோளாறை
சரிசெய்து கொள்வீர்' என்று
.....................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
