google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சொர்கவாசல்

Sunday, August 11, 2013

சொர்கவாசல்

http://img2.cache.netease.com/2008/2012/12/8/201212081458108c2f9.jpg

வாழ்க்கையின்
சொர்கவாசலை
முதன் முதலாக
நான் பார்த்தப்போது.......
 

இன்பத் திகைப்பில்
என்னால்
உள்ளே நுழைய
இயலவில்லை.....
 
அதீதப் பசி...
ஆனாலும்
என் முன் இருந்த
அமுதக் கலயத்தை.....
 
இன்பத் திகைப்பில்
என்னால்
அள்ளிப் பருக
இயலவில்லை
 
இன்று நான்
இன்பக் கடலில்
இரவு பகலாய்
நீந்தித் திளைக்கிறேன்
 
ஆனாலும்
என்னால்...
அந்த ஆரம்ப நிகழ்வை
அழிக்க இயலவில்லை

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1