google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கூமுட்டை கூட்டம்

Sunday, April 19, 2015

கூமுட்டை கூட்டம்

இந்த மாபெரும் மனிதக்  கூட்டம்
இருபது தமிழன் உயிருக்காக திரண்ட கண்டண கூட்டமா ?

இல்லை விலைவாசி உயர்வை கண்டிக்கும் கூட்டமா ?

இல்லை மதவாத அரசியலை எதிர்க்கும் கூட்டமா?

இல்லை பஸ் கட்டண உயர்வை கண்டித்து படை திரண்ட கூட்டமா ?

இல்லை நடுத்தர மக்களுக்கு ஷாக்கடிக்கும்  மின்சார கட்டண உயர்வை எதிர்க்க கூடிய கூட்டமா?

இல்லை தஞ்சை மண்ணை பாலைவனமாக்கும்  மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கூடிய கூட்டமா ?

இல்லை நில ஆக்கிரமிப்பு சட்டத்தை எதிர்த்து வெகுண்டெழுந்த கூட்டமா?

இல்லை காவிரியில் தடுப்பணை கட்டி தமிழக விவசாயிகள்
வயிற்றில் அடிக்க நினைக்கும் கர்நாடகவை எதிர்த்து கூடிய கூட்டமா?
இல்லவே இல்லை
இவை  கல்யாண் ஜுவல்லரி நகைக்கடை திறக்க காசு வாங்கி கொண்டு வந்த கூத்தாடிகளை பார்க்க வந்த கூமுட்டை கூட்டம் ! 



இப்படி பட்ட மானம் கெட்ட மடையர்கள் கூட்டமாக இருக்கும் வரை
தமிழ்நாட்டில் எத்தனை சீர்திருத்த வாதிகள் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது!
நிச்சயம் அடுத்த முதல்வரும் சினிமாவில் இருந்து தான்  வருவார்

அதனால் மக்களே!

பிள்ளைகளை படிக்க வைப்பதைவிட
(சினிமாவில்) நடிக்க வையுங்கள்



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1