யோசா புசோன்-Yosa Buson
(1716 - 1784) இவர் கவிஞர் மட்டுமின்றி ஓவியருமாவர் இவரது படைப்புகள் ஓவியமும் கவிதையும் கலந்து வாசிப்பவர்களை நேசிக்க வைத்தன
இவரது ஹைக்கூ கவிதைகளில் தெளிவாக அதே நேரம் அழகாக மறைக்கப்பட்ட கதை இருந்தது.உணர்வு கொண்ட காதல் ,இயற்கையின் டைனமிக் இயக்கங்கள் ,..வெவ்வேறு விதமாகச் சித்தரிக்கும் படங்களுடன் இருந்தன
1
ஒரு வௌவால் பறந்து திரிகிறது
நிலவொளியில்
பிளம் மலர்கள் மேலே...
2
அந்த வெள்ளை சாமந்திக்கள் முன்
கத்தரிக்கோலின் தயக்கம்
ஒரு கணம்
3
கோடாரியின் வீச்சு
குளிர்காலக் கட்டைகளில்
பைன் மர வாசனை
4
மேற்கு ஊதிய காற்றில்
உதிர்ந்த இலைகள் குவிந்தன
கிழக்கே

5
மாலைக் காற்று
சென்னாரைகளின் கால்களை
தழுவும் நீரலைகள்
6
குளிர்கால ஆற்றில்
மிதந்து வருகின்றன...
புத்தருக்குப் படைக்கப்பட்ட மலர்கள்
7
ஒரு குட்டித் தூக்கம் போட்டு
விழித்துப்பார்த்தால்.....
வசந்தம் முடிந்து போனது.
8
பேரிக்காய் மரத்துப் பூக்கள்
நிலவின் வெளிச்சத்தில்....
கவிதை வாசிக்கும் பெண் போல
9
வசந்த மழை பொழிகிறது
ஊறவைத்த குழந்தையின் கந்தைத்துணியாய்
ஈரமான வீட்டுக்கூரை
10
நிலவோடு பேசு
விளைந்த நெல்வயல் வெளியில்...
தவளையின் கத்தும் ஒலியைக் விடுத்து
11
உண்மையில் நான் விரும்புகிறேன்
பனிபடர்ந்த நிலவின் கீழ்...
என் கையே தலையணையாக
12
பழைய கிணறு
நீந்தும் மீன்
மௌனத்தின் ஓசை
13
அந்த மலையடிவாரத்தில்
நிலத்தை உழும் போது
ஒரு பறவையின் சப்தமும் இல்லை
14
அந்தக் கிழவன்
பார்லியை வெட்டுவது
வளைந்த அரிவாள் போன்று உள்ளது.
15
அந்திப் பொழுதில் காகங்கள்
ஒன்றன் பின் ஒன்றாக
பறப்பதை முடித்துக்கொண்டன
..........................................தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்
இவரது ஹைக்கூ கவிதைகளில் தெளிவாக அதே நேரம் அழகாக மறைக்கப்பட்ட கதை இருந்தது.உணர்வு கொண்ட காதல் ,இயற்கையின் டைனமிக் இயக்கங்கள் ,..வெவ்வேறு விதமாகச் சித்தரிக்கும் படங்களுடன் இருந்தன
1
ஒரு வௌவால் பறந்து திரிகிறது
நிலவொளியில்
பிளம் மலர்கள் மேலே...
2
அந்த வெள்ளை சாமந்திக்கள் முன்
கத்தரிக்கோலின் தயக்கம்
ஒரு கணம்
3
கோடாரியின் வீச்சு
குளிர்காலக் கட்டைகளில்
பைன் மர வாசனை
4
மேற்கு ஊதிய காற்றில்
உதிர்ந்த இலைகள் குவிந்தன
கிழக்கே
5
மாலைக் காற்று
சென்னாரைகளின் கால்களை
தழுவும் நீரலைகள்
6
குளிர்கால ஆற்றில்
மிதந்து வருகின்றன...
புத்தருக்குப் படைக்கப்பட்ட மலர்கள்
7
ஒரு குட்டித் தூக்கம் போட்டு
விழித்துப்பார்த்தால்.....
வசந்தம் முடிந்து போனது.
8
பேரிக்காய் மரத்துப் பூக்கள்
நிலவின் வெளிச்சத்தில்....
கவிதை வாசிக்கும் பெண் போல

9
வசந்த மழை பொழிகிறது
ஊறவைத்த குழந்தையின் கந்தைத்துணியாய்
ஈரமான வீட்டுக்கூரை
10
நிலவோடு பேசு
விளைந்த நெல்வயல் வெளியில்...
தவளையின் கத்தும் ஒலியைக் விடுத்து
11
உண்மையில் நான் விரும்புகிறேன்
பனிபடர்ந்த நிலவின் கீழ்...
என் கையே தலையணையாக
12
பழைய கிணறு
நீந்தும் மீன்
மௌனத்தின் ஓசை
13
அந்த மலையடிவாரத்தில்
நிலத்தை உழும் போது
ஒரு பறவையின் சப்தமும் இல்லை
14
அந்தக் கிழவன்
பார்லியை வெட்டுவது
வளைந்த அரிவாள் போன்று உள்ளது.
15
அந்திப் பொழுதில் காகங்கள்
ஒன்றன் பின் ஒன்றாக
பறப்பதை முடித்துக்கொண்டன
..........................................தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |