சாலை விதிகள் போன்று
காதலுக்கும் விதிகளுண்டு
காதலிப்போர் தெரிந்து கொண்டால்
காதல்விபத்துகள் ஏதுமில்லையே
காதற்சிறப்புரைத்தல் என்று
வள்ளுவர் வகுத்த விதிகள் பத்து.
இதிகாசங்களில்
எழுதப்பட்டவைகள் பல
ஐம்பெரும் காப்பியங்களுள்
சொல்லப்பட்டவைகள் பல
அந்தகால இலக்கியங்கள் முதல்
இத்தகால இலக்கியங்கள் வரை
எழுதப்பட்டவைகள் பல
எழுதியவர்கள் பலர்
காதல்விதிகள் பலவுண்டு
காதலிப்போர் தெரிந்து கொண்டால்
காதல்விபத்துகள் ஏதுமில்லையே
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |