google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தேர்தல்கால 144 தடை உத்தரவு அவசியமா?

Tuesday, April 22, 2014

தேர்தல்கால 144 தடை உத்தரவு அவசியமா?


இதுவரை இல்லாத அதிசயமாக இந்தத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறபித்துள்ளது தேர்தல் ஆணையம் ஜனநாய நாட்டில் ஜனநாயக தேர்தல் நடக்கும் போது இதுபோன்ற மக்கள் விரோத அடக்கி ஆளும் அடக்குமுறை சட்டம் அவசியமா...?

தேர்தலில்  வன்முறைகள் நடக்கும் நிலை இருக்கும் மாநிலங்களில் 144 தடை உத்தரவும் 5 பேருக்கு மேல் மக்கள் கூட்டமாக கூடும் நடவடிக்கையை தடுப்பதற்கு இது போன்ற கடுமையான சட்டம் அவசியமே......

இது  கள்ள ஓட்டு போடும் அவலத்தை தடுத்து நிறுத்துவதோடு மக்களுக்கு பயமின்றி சுதந்திரமாக தாங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களிக்க உதவியாக இருக்கும்

எங்கள் கிராமத்தில் மட்டுமே அதை சுற்றியுள்ள பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்கும் சேர்த்து ஒரு வாக்குச் சாவடி இருக்கும் மற்ற சிறு கிராமங்களிலிருந்து வாக்காளர்களை கார்,ஜீப்...போன்ற வாகனங்களை வைத்து பெர்ய கட்சி வேட்பாளர்கள்  அழைத்துவந்து வேனிலேயே மெஸ்மரிசம் செய்தும் பணம் பட்டுவாடா பண்ணியும் தங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் இந்தத் தேர்தலில் இது சாத்தியமில்லை

இன்னும் வாக்குச்சாவடி அருகே தேர்தல் பூத் என்று வைத்துக்கொண்டு   வாக்காளர்களை ரேக்கிங் செய்யும் நிலை நகரம் மற்றும் கிராமங்கள் அனைத்திலும் நடக்கும்....இதுவும் இனி சாத்தியமில்லை

இப்படி தேர்தல் கால 144 தடை உத்தரவு மக்களுக்கு நன்மை செய்வதற்கே

ஆனால்.........இதை சில பெரிய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் எதிர்ப்பது சுயநலமின்றி எதுவுமில்லை இதனால் மக்களுக்கு தொல்லையில்லை என்பதை மறந்து தங்கள் கள்ள ஓட்டும் தேர்தல் மெஸ்மரிஸமும் செய்ய முடியாமல் போனதால் தொல்லை தருபவர்கள் இவர்கள்

எத்தனையோ  சீர்திருத்தங்களை செய்துவரும் தேர்தல் ஆணையத்தின்  இந்த தேர்தல்கால 144 தடை உத்தரவு சரியான முடிவு........இன்று பணமும் சாதி,மதமும் கொடூரமாக  பல்லைக் காட்டி வரும் இந்த தேர்தல் காலத்தில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கவும்   வன்முறையற்ற தேர்தல் நடைபெறவும் இது கட்டாயம் உதவும் 

இளங்குமரன்@ilangumaran 
பணம் வாங்கிட்டு ஓட்டு போடறதுக்கு எதுக்குடா எலக்‌ஷன் நடத்தனும், டைரக்டா ஏலம் விட்றலாம்.

 Tamil Nadu News@NewsinTamilNadu 
அதிகாரிகளை பார்த்ததும் பணத்தை வீட்டு வாசலில் வீசி சென்ற கும்பல்:

ச.சிமெண்டு ஆண்டி @moodanmani 
தேர்தல் கமிஷன் எமர்ஜன்சி அறிவித்து விட்டு எலக்ஷன் நடத்தலாம் #144 தடை உத்தரவு

ஜெயப்ரியன் @jjayapriyan 
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு முதல் முறையாக 144 தடை உத்தரவு அமல்... # ஜனநாயக தேசத்தில் மக்களை அடக்கி ஒடுக்கி.

mumbaitamilan@mumbaitamilan 
தேர்தலில் திமுகவினருக்கு நம்பிக்கை போய்விட்டது: தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி குற்றச்சாட்டு - 

premalatha@LathaChetty 
டவுட்டு டவுட்டு எல்லாம் முடிஞ்ச பிறகு 144 போட்டு யார ஏமாத்தராங்க.இவ்வளவு நாள் எங்க போனாங்க தேர்தல் ஆனையம்.

mumbaitamilan@mumbaitamilan 
பாராளுமன்ற தேர்தலையொட்டி அறிவித்த 144 தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்; தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கட்சி..


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1