(குறிப்பு-ட்விட்டர்-முகநூல் மோசடிகள் தொடர் கதையாக சமீபத்தில் காமெடி நடிகர் பரோட்டா சூரியையும் பாடாய் படுத்திய போலி ட்விட்டர்கள் முகமூடி போட்ட முகநூல் வாசிகள் செயலை நமது வலைப்பூ வன்மையாக கண்டிக்கின்றது.....)
அ...ஆ...இ...ஈ...
எழுதப் படிக்க
எதுவும் தெரியாத
என் பெயரில்தான்
எத்தனை எத்தனை
எத்தர்கள் அய்யா....
அத்தனை பேரும்
போலி ட்விட்டர்கள்
என் முகத்தையே
முக மூடியாய் போட்டு
அவதூறு பேசும்
முகநூல் வாசிகள்
அய்யா....அய்யய்யா
இந்த அப்பாவி பரோட்டாவையும்
அந்தப் பாவி ட்விட்டர்கள்தான்
கொத்திப் போட்டார்களே
கொத்து பரோட்டா போன்று..
வளர்ந்து வரும் நேரத்தில்
வாழ்த்தா விட்டாலும்
வீழ்த்த நினைக்காதீர்கள்
எத்தனையோ பதிவுகள் எளிதாக எழுதிய எனக்கு இந்தப் பதிவு எழுத தள்ளாட்டம் தடுமாற்றம்......சமுக வலைத்தளங்கள் ட்விட்டர் பேஸ்புக்...போன்றவைகளில் விஷமிகள் செய்யும் அவதூறு நடவடிக்கையால்.....இங்கேயும் நமது எழுத்துக்களிலும் நம்மை அறியாமல் ஏதேனும் வார்த்தைகள் வந்து விழுந்துவிடுமோ?....நம்மை அறியாமல் நம்மையும் நமது நன்மதிப்பையும் வீழ்த்திடுமோ? என்ற பயம்
இந்த சமுக வலைத்தளங்கள் சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் நட்பை விதைத்து வந்த நிலையை மீறி இன்றும் அதில் அரசியல்,சினிமா போன்றவைகள் நுழைந்ததால் அதுவும் சாக்கடையானது.......... நாற்றமடிக்கின்றது
இதில் நாம் பாராட்ட வேண்டியது நமது காவல் துறையினரைத்தான்
தங்களது கடமைகளுக்கிடையில் பல கோடி பயனர்களுடன் உலவும் இந்த சமுக வலைதளங்களில் நடைபெறும் சைபர் குற்றங்களை கண்டறிந்து களை எடுக்கும் அவர்கள் செயல் அரிது.....
உங்கள் பார்வையில்......................
ட்விட்டர்,பேஸ்புக்...போன்ற சமுக வலைத்தளங்கள் நம்ம சமுதாயத்திற்கு தேவையா....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |