google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மூளைச் சலவை

Saturday, November 16, 2013

மூளைச் சலவை

இதிகாச காலம் தொட்டு 
இன்றுவரை தொடரும் 
இந்தக் கொடுமை...
இன்னும் முடியவில்லை 

 ஓம் நமோ நாராயனாயக நமக 
மூளைச் சலவையின் 
முக்கிய மந்திரம் 
இரணியனை  அழிக்க 
கருவறையிலிருந்த 
பிரகலாதனுக்கு........
நாரதர் செய்த மூளைச் சலவை 
இதிகாச காலம் தொட்டு 
இன்றுவரை தொடரும் 
இந்தக் கொடுமை...
இன்னும் முடியவில்லை 

அழும் குழந்தைக்கு 
அம்மா பாடும் தாலாட்டும் 
அதுவும் ஒருவகை 
மூளைச் சலவை.........?

தடைகற்களை 
தகர்த்தெறிந்து 
தான் வந்த பாதையில் 
தன் பிள்ளையும் நடைபயில 
தன்னம்பிக்கை ஊட்டும் 
தந்தையின் பேச்சும்
மூளைச் சலவையின் 
முக்கிய உரை.........?

அகரம் சொல்லி 
தகரங்களை 
தங்கமாக்கும் 
ஆசானின் பாடங்கள் 
அதுவும் மூளைச் சலவையே 

இந்தச் சலவைகளால் 
அழுக்குகள் அகலுகின்றன 
அய்யோ...பாவம் 
இங்கே சில விஷப்பூச்சிகள் 
இவர்களின் சலவையால்....
அழுக்குகள் சேருகின்றன

தேர்தல் காலங்களில் 
வாக்குறுதிகள் வழங்கி 
மக்களை மடையர்களாக்கும் 
அரசியல்வாதிகளின் 
அயோக்கியத் தனங்களும் 
அந்த வகையே!

மாயை செய்யும் 
மதவாதிகளின்
மந்திரங்களும் 
தந்திரங்களும் 
என்றும் தீராத 
மூளைச் சலவை...?
வன்முறை கலவை 

இதிகாச காலம் தொட்டு 
இன்றுவரை தொடரும் 
இந்தக் கொடுமை...
இன்னும் முடியவில்லை  

thanks-image from tumblr
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1