google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: காணாமல் போன கவிதைகள்-2

Sunday, September 15, 2013

காணாமல் போன கவிதைகள்-2

என் தாயாரின் மரணம் திடீர் நிகழ்வு அல்ல...
அவர்கள் அருகிலேயே இருந்து அவர்கள் படும் வேதனைகளை கண்டு வாழ்வின் துயரத்தின் எல்லைக்கு சென்றேன்



http://i0.wp.com/yamani313.files.wordpress.com/2013/03/256731.jpg?fit=1000%2C1000
அப்போது நான் தூத்துக்குடியில்  வ.ஊ.சி.கல்லூரியில் எம்.ஏ.முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன் எனது தந்தை மிகவும் வேண்டிக்கொண்டதால் முதல் செமஸ்டர் பரிச்சையின் முதல் தேர்வு எழுதச் சென்றேன்....

என்னால் தேர்வில் எதுவும் எழுத முடியவில்லை எதையோ எழுதிவைத்து வெளியே வந்தால் எனது உறவினர் மாமா அவர்கள் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்

அம்மா இறந்து போனதாகவும் எனக்காகத்தான் அடக்கம் செய்யாமல் இருப்பதாகவும் சொல்லியபோது...எதுவும் பேசாமல் அவருடன் சென்றேன் அங்கிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்திலிருந்த எனது கிராமத்துக்கு சென்று அடக்கத்தில் கலந்துகொண்டேன்

மீண்டும் நான் கல்லூரிக்கு வரும் போது எனது மொட்டத்தலையை கண்டு உடன் படிப்பவர்களுக்கும் விடுதியில் என்னுடன் உள்ளவர்களுக்கும் நான் பதில் சொல்வதிலேயே எனது துயரம் அதிகரித்துக்கொண்டிருந்தது...

அப்போது என் அறையில் இருந்த நண்பரிடம்..........
எங்க அம்மா செத்ததைவிட இவர்களுக்கு பதில் சொல்வதே மிகுந்த கஷ்டமாக இருக்கிறது ஏன் தான் மொட்டை அடித்தார்களோ...? இல்லையேல் யாருக்கும் தெரியாதே...என்று ஆதங்கப்பட்டேன்

அவரோ தவறாகப் புரிந்து கொண்டு.........
என்னய்யா நீ...உயிரைக் கொடுத்த தாயிக்கு மயிரைக் கொடுத்ததுக்கு வருத்தப்படுகிறாய்?...என்று ஏளனமாகப் பேசியது இன்னும் என்னுள் துயத்தை விதைத்தது....

என் துயரங்களை யாரிடமும் சொல்லாமல் அவ்வப்போது கிடைக்கும் துண்டுக்காகிதங்களில் எழுதிவைத்தேன்....
அவைகளில் சில........

அம்மா
நீ 
அகல் விளக்கு
உன்னை 
அணைத்துவிட்டு...
எங்கே போனது 
உன் சுவாசக்காற்று...?

  

***************************

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmnXPYpbhBDRuQ0z9MdWTSLAL70oZ4Sd7TAwEzvygeoR194rXzt8chKfScStyevqjoKcx3iq84C3GcI4blmjIFLHq4nQQG3NKPVj2tNOHJHp7zvAlyj8Yy0z3VTVBjzXxCPHV0_raUGo8I/s1600/Sky.jpg
 

அம்மா....
மரணம் உனக்கு 
வலியிலிருந்து... 
அமைதி தந்தது 

உன் மரணம் 
எனக்கும்
அமைதி தந்தது....  
ஆனால் 
வலியும் தந்தது 

******************************

http://media.tumblr.com/tumblr_mb945jY8WL1rxg8ei.jpg

அம்மா....
நீ
அழிந்து போகவில்லை
இதோ
என் கவிதைகளில்
உயிர் வாழ்கிறாய்

*****************************

https://sphotos-a-ord.xx.fbcdn.net/hphotos-prn1/p480x480/73328_560383227307900_1991764519_n.jpg

அம்மா....
அன்று எனக்கு 
சோறு  ஊட்டிய நீ
இன்று ஏன்
சோகத்தை ஊட்டினாய்..?

இப்படி நிறைய அன்று எழுதிவைத்தேன்...
அவைகள் என் துயரத்தை துரத்தியடித்தன 
அவைகளில் சில இங்கே இன்று எழுதிவைக்கிறேன் 
உங்கள் சோகத்தை பிறரிடம் சொல்லாதீர்கள்   
ஒருவரின் கஷ்டம் இன்னொருவரின் இஷ்டம் 
உங்கள் சோகத்தை  எழுதிவையுங்கள் 
அதுவே உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.............(இன்னும் வரும் ) 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1