google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நரகாசூரர்கள் இன்னும் சாகவில்லை

Wednesday, October 30, 2013

நரகாசூரர்கள் இன்னும் சாகவில்லை


நரகாசூரர்கள் 
இன்னும் சாகவில்லை...
நம்புங்கள் 
நாட்டில் 
ஊழல்வாதிகளாய் 
உலா வருகின்றார்கள் 



நரகாசூரர்கள் 
இன்னும் சாகவில்லை...
சில நேரங்களில் 
நீதிமான்களாய் 
நியாயத்தை 
நியாய விலையில்....
நியாயம் பேசுகின்றார்கள் 

நரகாசூரர்கள் 
இன்னும் சாகவில்லை...
அவ்வப்போது 
அநியாயத்தை 
அரசியல் செய்கின்றார்கள் 
அறியாமையை 
இலவசமாக விதைக்கின்றார்கள் 

நரகாசூரர்கள் 
இன்னும் சாகவில்லை...
மதம் பிடித்த யானைகளாய்
மாறித்தான் போனார்கள்
மனிதாபிமானத்தை 
மண்ணுக்குள் புதைக்கின்றார்கள்  

நரகாசூரர்கள் 
இன்னும் சாகவில்லை...
அமெரிக்க ஒபாமாக்களுக்கு 
வயிற்று வலி என்றால்....
இங்கே இருக்கும் 
இந்திய அரசியல்வாதிகள் 
கசாயம் காய்க்கின்றார்கள் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1