google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஜெயலலிதா V s மோடி- கூத்தாடி அரசியலுக்கு முடிவா?

Wednesday, October 8, 2014

ஜெயலலிதா V s மோடி- கூத்தாடி அரசியலுக்கு முடிவா?

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததின் மூலம் கூத்தாடிகளின் பவுசு காட்டும் சொகுசான  மேனா மினிக்கி அரசியலுக்கு முடிவு வந்திருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கணிக்க.......

இல்லை இல்லை இல்லவே இல்லை 

 மீண்டும் ரஜினிகாந்த்,விஜயகாந்த்,விஜய்.... போன்றவர்கள் தலைமையில் அல்லது அவர்கள் ஆதரவு கூட்டணியில்தான் தமிழ்நாட்டின் தலைவிதி எழுதப்பட்டு கோமாளித்தனங்கள் அரங்கேறும் என்றும் பேசப்பட.......

சினிமா மூலம் மக்களுக்கு அறிமுகமான வயது,மற்றும் மார்கெட் இழந்த பணபலமிக்க நடிகர் நடிகைகளை அரசியல்வாதிகள் தங்கள் கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள் 

அப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செல்வாக்கை பயன்படுத்தி பாஜக தமிழ்நாட்டில் கோட்டையை பிடிக்க நினைக்கிறார்கள் 

ஆட்சியைப் பிடிக்கலாம் 

ஆனால்....

அதுவே அவர்களுக்கு ஆபத்தாக அந்த நடிகர்களே அதிகார ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சினிமாவில் எப்படி மக்கள் சேவகர்களாக நடித்தார்களோ அதேபோல் நிஜத்திலும் நல்ல நடிகர்களாக அப்பாவி மக்களை மயக்குவார்கள் 

ஆனாலும்.......... 
Modi after becoming the PM of India

                                      thanks_YouTube by sosorry
 மோடி............
கூத்தாடிகளுக்கெல்லாம் பெரிய கூத்தாடியாக நாட்டைக் காக்க பெரும் கூத்தாடி....... கூத்தாடிகளை அழிப்பார்

எந்த அரசியல் கட்சி ஆதரவு தந்ததோ அதன் பல்லைப் பிடித்து பதம் பார்ப்பார்கள் 

கடந்தக்கால இத்தகைய நிகழ்வுகளே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா...போன்றவர்கள்
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அதிகாரப் பதவியிலிருந்து பேராசையாலும் ஆணவத்தாலும் சேர்த்த சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற நிகழ்வு............

இனிமேலும் அரசியலுக்கு  வர நினைக்கும் சினிமா பிரபலங்களுக்கு இந்த சிறைப்படம் சிறந்தப்  பாடமாக இருக்குமா....? 

இனிமேலாவது தமிழ்நாட்டில் கூத்தாடி அரசியலுக்கு முடிவு வருமா?




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1